ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இந்திய அரசிலயமைப்பு சட்டம் 311வது பிரிவின்படி பாரமுல்லா மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் அபாக் அகமத் வானி, ஜம்மு காஷ்மீர் துணை பிரிவு காவலர் தன்வீர் சலீம் தர், கிராம அளவிலான பணியாளர் சையத் இப்திகார், ஜல் சக்தியில் இருக்கும் இர்ஷத் அகமத் கான், பொது சுகாதார பொறியியல் துணை பிரிவு உதவி லைன் மேன் அப்துல் மொமின் பீர் ஆகிய 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.