மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் – அமெரிக்க அதிபர் பைடன் பகீர்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்து வரும் சீனாவையும், ரஷ்யாவையும் திட்டித் தீர்த்த ஜோ பைடன், பாகிஸ்தான் குறித்தும் பேசினார்.

அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அதிபர் ஜோ பைடன் பேசியதாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்:

சீன அதிபர் ஷி ஜின்பிங், தான் விரும்புவதை புரிந்து கொண்டவர். ஆனால், மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அதை எப்படி கையாள்வது. ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடும் போது, அதை எவ்வாறு கையாள்வது. எனது எண்ணப்படி, உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி படுகொலை!

அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இச்சூழ்நிலையில் பைடனின் இந்த பேச்சு, ஷெரீப்பின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.