ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்- 11 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ:
ஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ராணுவ பயிற்சி தளத்தில் பயங்கவராத தாக்குதல் நடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் புரிவதற்காக ரஷ்ய வீரர்கள் அந்நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தில் பயிற்சி செய்து வந்த நிலையில், இரு பயங்கரவாதிகள் இந்த பயிற்சி மையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.