இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் கொடுமை வழங்குவதற்கு சமமான சாத்திய கூறுகள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை இல்லை. ஆனால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமான சாத்திய கூறுகள் உள்ளது என்றும், இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்த இலங்கை நாட்டை சேர்ந்தவர் தனத்துக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி, “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
சிறுபான்மையினருக்கு குடி உரிமை வழங்குவதற்கான குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருக்கிறது. இதில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்க சமமான சாத்திய கூறுகள் உள்ளது.
மனுதாரர் இந்தியாவில் பிறந்துள்ளதால் இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. எனவே, மனுதாரர் குடியுரிமை வழங்கக்கூடிய மனுவை, தமிழ்நாடு அரசு மத்திய குடியுரிமை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.