பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த மாணவர்கள்.. டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லி பல்கலைகழகம்(University of Delhi) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மிராண்டா ஹவுஸ்(Miranda House College) பெண்கள் கல்லூரியில் கடந்த 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மிராண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியின் நுழைவு வாயில் மூடப்பட்டது. ஆனால், ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரியின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவியது. ராம்ஜாஸ் ஆண்கள் கல்லூரி(ramjas college) மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அதோடு சில மாணவர்கள் ஆபாசமாக பேசி கோஷங்கள் எழுப்பியது பலரை முகம் சுழிக்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.