கதையை எப்போ சார் சொல்வீங்க?… உறுதியானது சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு கூட்டணி

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை நம்பி பணத்தை முதலீடு செய்தால் போட்ட பணமும், கூடுதலாகவே லாபமும் கிடைக்கும் என்ற நிலை கோலிவுட்டில் தற்போது உருவாகியுள்ளது. அவர் சமீபத்தில் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் கோலிவுட்டின் 100 கோடி ரூபாய் வசூல் ஹீரோக்களில் ஒருவராகியிருக்கி சிவா. அவர் தற்போது, இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம்  நாளை(அக்டோபர் 21) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு, நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம்? அப்புறம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ஷூட்டிங் எப்போ வேணாலும் போலாம் சார். ஆனா இந்த கதையை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்” என்று பதிலளித்தார். தற்போது சிவாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த உரையாடல் மூலம் அவர்கள் இருவரும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.