வெடித்து சிதறிய பட்டாசுகள்… பறிபோன உயிர்கள்…தீபாவளி நேரத்தில் நிகழ்த்த சோகம்

மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட பன்மோர் நகரில் ஒரு வீட்டின் குடோனில் பட்டாசுகள் பதுக்கி பதுக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. தீபாவளி பண்டிகையை முன்னி்டு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சிலர் குடோன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வெடிவிபத்திவ் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இந்த கொடூர விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் மொரேனா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெடிவாங்க குடோனில் கூடியிருந்தவர்களில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் நோக்கில், வெடிவிபத்தில் தரைமட்டமான குடோன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், படாலாவிவ் பட்டாசு ஆலை ஒன்றில், சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளி நேரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.