கிரே பட்டியலில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்| Dinamalar

இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்ததாக எப்.ஏ.டி.எப். அமைப்பின் குற்றச்சாட்டில் ”கிரே” பட்டியலிலிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துணை அமைப்பான ஆசியா, பசிபிக் பிரிவு குழு நடத்திய ஆய்வின்படி, பாகிஸ்தானை ‘கிரே’ எனப்படும், நடவடிக்கைகள் எடுப்பதில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் வைத்திருந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கிடைப்பது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில், ,எப்.ஏ.டி.எப்., கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ”கிரே” பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் நிகிரகுவா என்ற நாடும் ‘ கிரே’ பட்டியலிலிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மியான்மர் நாடு பல ஆண்டுகளாக ”கிரே” பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.