பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் தற்போது திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.

நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு சினிமா கிடைத்திருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்களுக்கு பெரிதாக புரியவில்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

படத்துக்கு இப்படி ஒருசேர பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது பொன்னியின் செல்வன் பாகம் 1. படத்தின் முதல் பாகமானது இதுவரை உலகம் முழுவதும் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படமானது ஏப்ரலில் வெளியாகும் என தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என பலர் காத்திருந்தனர். தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும். இப்படமானது நவம்பரில் ஓடிடியில் வெளியாகுமென்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.