தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில இன்று மாலை தீப திருவிழாவில் நடைபெற்றது. ஒளிமயமான இந்த விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசும்போது, ” ஸ்ரீராமரின் ஆளுமையை போற்றும் வகையிலும், உலக அளவில் நமது அடையாளங்களை நிலைநாட்டும் நோக்கிலும் கர்த்வய பாதையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
ஒட்டுமொத்த உலகிற்கும் கலங்கரை விளக்கமாக திகழும் அவரது லட்சியங்களை பின்பற்றுவது இந்தியர்கள் ஒவ்வொருவரின் நமது கடமை. பகவான் ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பிரயாக்ராஜ் நகரில் 51 அடி உயரத்தில் ஸ்ரீராமர் மற்றும் நிஷாத்ராஜ் சிலைகள் நிறுவப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
15 லட்சம் தீபங்கள்:
முன்னதாக சரயு நதியின் படித்துறையில் ஆரத்தி நிகழ்வில் கலந்து கொண்ட மோடி, அங்கு, பிரமாண்ட தீப திருவிழாவையும் தொடங்கி வைத்தார். இந்த திருவிழாவில் மொத்தம் 15 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கின்னஸ் சாதனை:
தீப திருவிழாவையொட்டி, அயோத்தியில் ஒரே இடத்தில் மொத்தம் 15 லட்சம் அகல்விளக்குகள் இயற்றப்பட்டன. இந்த பிரம்மாண்ட நிகழ்வு உலக கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இதனை அங்கீகரி்க்கும் விதமாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் என்ற முறையில் யோகி ஆதித்யநாத்துக்கு, பிரதமர் மோடி முன்னிலையில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.