Big Breaking: பள்ளி மாணவர்கள் ஹேப்பி; தமிழக அரசு சூப்பர் உத்தரவு!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை 24ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு மகிழ்ந்திட மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என மொத்தம் 3 நாட்களும் தொடர் விடுமுறையாக வருவதால் இந்த ஆண்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை மிகவும் கூடுதலாகவே உள்ளது.

இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை வந்து உள்ளதால் பண்டிகை முடிந்ததும், முடியாததுமாக நாளையே அவரவர் தங்களது சொந்த ஊரில் இருந்து கிளம்ப வேண்டிய நிலை உள்ளது.

எனவே தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய் கிழமை அரசு விடுமுறை விட வேண்டும் என்ற, கோரிக்கைகள் எழுந்தன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேப் போன்று தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை மறுதினம் 25ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.