ஜெய் ஆஞ்சநேயா…! மண்டியிட்டு வேண்டி கோயில் உண்டியலை தூக்கிச்சென்ற திருடன் – வைரலாகும் வீடியோ

கோயில்களில் விலை மதிப்பற்ற சிலைகள், தங்க நகைகள், உண்டியல்கள் ஆகியவற்றை திருடர்கள் திருடிக்கொண்டு செல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நடுராத்திரயில் காரில் வந்திறங்கி, கடவுளை வேண்டி கோயிலில் திருடி செல்வது என்பது மிகவும் அரிதுதான். 

அதேபோன்ற ஒரு சம்பவம்தான் தீபாவளிக்கு முந்தைய நாள், மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடந்துள்ளது. ஜபல்பூரில் உள்ள ஒரு கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், வெள்ளை நிற காரில் வந்திறங்கும் அந்த திருடன், கடவுள் சிலை முன் இருக்கைகளையும் கட்டிக்கொண்டு, பணிவுடன் தெய்வத்திடம்  வேண்டி உண்டியலை தூக்கிக்கொண்டுச்சென்றுள்ளார். 

தீபாவளிக்கு அன்று அதிகாலை 2 மணி, ஜபல்பூரில் உள்ள கௌர் சௌக்கி என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. தீபாவளி அன்று காலையில் வந்த பக்தர்கள் இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளனர். 

சிசிடிவியில் பதிவான காட்சிகளில், திருடன் கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரம் மற்றும் கோயிலின் வெளியே திருடன் விட்டுச்சென்ற செருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்ற ஒரு சம்பவம், இதே மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. காளி கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.