'அராஜகத்தின் அடையாளம் கெஜ்ரிவால்' – மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சாடல்!

அராஜகத்தின் அடையாளம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சாடி உள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “ரூபாய் நோட்டுகளில், விநாயகர், லட்சுமி கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும். இதன் மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கலாம்,” என யோசனை தெரிவித்து இருந்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்து, கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று, பாஜகவைச் சேர்ந்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்று விநாயகர் படங்களை இணைக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளம். அவர் பொய் பேசுகிறார். அவர் தனது போலித்தனத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப புதிய பிரசாரங்களை செய்கிறார். பாஜக அரசுக்கு எதிராக காங்கிரசின் குற்றப் பத்திரிகை குறித்து, தேசியத் தலைமை ஜாமினில் உள்ளவர்களுக்கு மற்றவர்கள் மீது குற்றப் பத்திரிகை வெளியிடத் தார்மிக உரிமை இல்லை என்று அவர் கூறினார்.

“இரட்டை இன்ஜின் அரசு” ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளதாகவும், வளர்ச்சியின் வேகத்தை முன்னெடுத்துச் செல்ல பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என்றும் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் சக்தி ஒவ்வொரு துறையிலும் தெரியும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.