பிரேசில் அதிபர் தேர்தல்: முன்னாள் அதிபர் லுலா டா சில்வா வெற்றி!

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் நான்காவது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனரோ மீண்டும் போட்டியிட்டார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் இருந்தனர்.

எனினும் தீவிர வலதுசாரியான ஜெயிர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில்தான் பலபரீட்சை நடந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சில்வாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தன.

Morbi: தொங்கு பாலம் விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி பளீச்!

கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமசோன் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில், பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனரோ 49.10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபாராக வெற்றிபெற்றுள்ளார். புதிய அதிபராக தேர்வான லுலு டா சில்வா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.