லௌவுல… லௌவுல… லௌவுல… நான் விழுந்துட்டேன்… அறிவித்த கெளதம் கார்த்திக்… நானும் தான் என்ற மஞ்சிமா மோகன்…

கடல் படத்தில் அறிமுகமான நடிகர் கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனுடன் கடலை போட்டு வருவதாகவும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் காதலை இன்று இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தினர்.

அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் அதற்கு முன் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார்.

மஞ்சிமா மோகன் மீதான காதல் குறித்து கெளதம் கார்த்திக் :

சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்?பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் உங்கள் வயிறு உணரும். ..etc… @manjimamohan , எங்கள் பயணம் நிச்சயமாக வித்தியாசமானது.

நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் கேலி செய்து சண்டையிட்டுக் கொள்வோம். இது எங்கள் நண்பர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மஞ்சிமா மோகன்

“மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போனபோது நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்க்கையில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்!!

நான் உன்னிடம் நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதை உணர நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான்! நீங்கள் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.