''இருடா வெளியில வந்து வச்சிக்கிறேன் எல்லாரையும்'' – சவுக்கு சங்கர் ஆக்ரோஷம்

திமுக தலைவர்

, அவரது குடும்ப உறுப்பினர்கள் காட்டி வரும் செல்வாக்கு, ஊழல், கமிஷன் என்பதை பற்றி யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார். ஆதாரமே இல்லாமல் தமிழக அரசை குறித்தும் அமைச்சர்களை குறித்தும் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி வருவதாக உ.பிக்கள் கடுப்பாகி வந்தனர்.

மேலும், பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, அதிமுக என பிரதான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் விமர்சித்தும் வந்தார் சவுக்கு சங்கர். இதில், அவருக்கு திமுக மீதே பெரிய கவனம் இருந்தது. குறிப்பாக ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ‘ஜி ஸ்கொயர்’ கம்பெனியை பற்றி சவுக்கு சங்கர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. அதனாலேயே பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் தள்ளியதாகவும் கூறுகின்றனர்.

முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் அந்த தண்டனையை நிறுத்தி வைத்தது. ஆனால், பழைய நான்கு வழக்குகளில் அவர் மீண்டும் கைதாகி இப்போது ஜாமீனும் பெற்றுள்ளார். இதனால் சவுக்கு சங்கர் விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டபோது வாகனத்தில் ஜன்னல் வழியே அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க முயன்றார். ஆனால், வாகனம் நிற்கவில்லை.

இருப்பினும் ”திராவிட ஆட்சி என்னும் பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அதை பற்றி பேசியதால்தான் என்னை விடுதலை செய்யவிடாமல் இருக்கின்றனர்” என்று சவுக்கு சங்கர் சத்தமாக கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே சவுக்கு சங்கர் தனது வட்டாரத்தில் ” இருடா வெளியில வந்து வச்சிக்கிறேன் எல்லாரையும்” என்று தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.