“காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்”.. எங்கெங்கு கனமழை?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

வரும் 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், 22ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

வரும் 21, 22ம் தேதிகளில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.