கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நபர் 44 வயதுடையவர் எனவும் அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.