டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் வதந்தி

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள வெப் தொடர் வதந்தி. முதன் முறையயாக எஸ்.ஜே.சூர்யா வெப் தொடரில் அறிமுகமாகிறார். இவர் தவிர சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். டிசம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. தமிழ் தவிர தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் காணலாம்.

இதுகுறித்து புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: இன்றைய ரசிகர்கள் தாங்கள் எதை விரும்பிப் பார்ப்பது என்பதில் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பதால் அவர்களுக்கான ஒரு வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் ஆழ்ந்து பதியக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட கதைக்களத்தை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்று.

போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் ஒரு வலை பின்னப்படுகிறது. தான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறறோம் என்பதை உணரும் அவர் அதிலிருந்து எப்படி தன்னை விடுவிக்கிறார் என்பதை சொல்லும் புதுமையான கதை இது.

இந்தக் கதை பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், இறுதியில் படம் முடிந்த பிறகும் அவர்களை சிந்திக்க வைக்கும். எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு மூத்த கலைஞர் தலைமையிலான ஒரு உன்னதமான திறமையுடன் கூடிய நட்சத்திரக் குழுவோடும் மற்றும் சஞ்சனா போன்ற புதிய அறிமுகங்களோடும் நிறைந்த இந்தத் தொடர் அதன் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை கட்டுண்டு கிடக்கச்செய்யும் என்கிறார்கள், புஷ்கரும், காயத்ரியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.