பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 224.64 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக சாகுபடி  நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 20.11.2022 முதல் 29.03.2023 வரை 130 நாட்களுக்கு மொத்தம் 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர்  திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.