மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே இலவச மின்சாரம் என்பது வதந்தி- அமைச்சர்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே, 100 யூனிட் இலவச மின்சாரம்  என பரவுவது தவறான செய்தி என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், அதிகாரிகளுடன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் பேட்டியளித்த அவர்,  வரக்கூடிய நாட்களில் அதிக மழை பாதிப்பு இருந்தாலும் சீராக மின் விநியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.