லிவ்-இன் பார்ட்னரைக் கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பிய இளைஞர்! – மடக்கிப் பிடித்து கைதுசெய்த போலீஸ்

சமீபத்தில் தன் லிவ்-இன் பார்ட்னர் அப்ஃதாப்பால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் குறித்த செய்திகள் வெளிவந்து மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தன் லிவ்-இன் பார்ட்னரை கொலைசெய்து வீட்டுக்குள் சடலத்தை மறைத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

கைது

இந்த விவகாரத்தில் 30 வயதான ராகுல் லால் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் குல்சானா என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்துள்ளார். குல்சானா ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் எனக் கூறப்படுகிறது. அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ராகுல் குடியிருந்த வீட்டிற்கு அருகேதான், குல்சானா தன் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அப்போதுதான் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, லிவ்-இன் முறையில் வசித்து வந்திருக்கின்றனர். அண்மையில் குல்சானாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராகுல், அவரிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், கடந்த நவம்பர் 10-ம் தேதி குல்சானாவை கொலைசெய்திருக்கிறார் அவர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல்துறையினர், “ராகுல், தான் லிவ்-இன் ரிலேஷனில் இருந்த இளம்பெண்ணை, சந்தேகப்பட்டு ஆத்திரத்தில் கொலைசெய்திருக்கிறார். எங்களுக்கு கொலை தொடர்பாக தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, இளம்பெண்ணை சடலமாக மீட்டோம். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்.

கைது

காட்டுப்பகுதி வழியாக எங்களிடமிருந்து குழந்தையுடன் தப்பமுயன்ற கொலையாளி ராகுலை மடக்கிப் பிடித்து கைதுசெய்தோம். எங்களின் முதற்கட்ட விசாரணையில் ராகுல் 5,000 ரூபாய்க்காக குல்சானாவை சந்தேகப்பட்டு, அவரைக் கொலைசெய்துவிட்டு குழந்தையுடன் தப்பியது தெரியவந்திருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.