புதுடில்லி: பிரதமர் மோடியின் டிகிரி குறித்த வழக்கில் டில்லி பல்கலைக்கழகம் சார்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கை 2023ம் ஆண்டு மே மாதத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பிரதமர் மோடி, டில்லி பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் 1978ம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றதாகவும், குஜராத் பல்கலையில் எம்.ஏ முழு அரசியல் அறிவியல் என்ற துறையில் பட்டம் பெற்றதாகவும் தேர்தலின்போது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரது பட்டம் போலியானது என பலரும் விமர்சித்தனர். இது தொடர்பாக 1978ம் ஆண்டு பட்டம் பெற்றவர்களின் தரவுகளை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது. ஆனால், டில்லி பல்கலை தற்போது வரை எந்தவித தரவுகளையும் வெளியிடவில்லை.
இது குறித்து குஜராத் பல்கலையின் பேராசிரியர் ஜெயந்திபாய் படேல், ‛பிரதமர் மோடி பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் முழு அரசியல் அறிவியல் பாடமே தங்கள் பல்கலையில் இல்லை’ எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து கடந்த 2017ல் டில்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் மோடியின் டிகிரி குறித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி யஷ்வந்த் வர்மா அடங்கிய தனி நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் டில்லி பல்கலைக்கழகம் சார்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கை 2023ம் ஆண்டு மே மாதத்திற்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement