துணிவுடன் களமிறங்கிய லைகா – அசத்தல் அப்டேட்

ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினோத்துக்கு என்னாச்சு என பலர் முணுமுணுக்க தொடங்கினார்கள். அதேசமயம் வலிமை படத்தில் பலரின் தலையீடு இருந்ததால் தான் நினைத்தபடி வினோத்தால் வலிமை படத்தை எடுக்க முடியவில்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால் துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.வாரிசும் பொங்கலுக்கு வெளிவருவதால் இந்தப் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. லைகா நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தையும் வெளிநாடுகளில் நல்ல முறையில் வெளியிட்டது. அதனால் துணிவு படத்தையும் சிறந்த முறையில் லைகா வெளிநாடுகளில் வெளியிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.