அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பகுதியில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
வாகனங்கள், வீடுகள் பனியால் மூடப்பட்டுள்ளதுடன், சாலைகளில் இரண்டு அடி உயரம் வரை பனி கொட்டிக்கிடக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
பனிப்புயலால் பஃபலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் தரையில் நான்கரை அடி உயரம் வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது.