ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை வரலாற்று சாதனை

பாங்காக்:
சிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்துவருகிறது. அரையிறுதியில் தோற்ற இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஹினா ஹயாட்டா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மனிகா பத்ரா, 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற கணக்கில் 4 செட்களை வென்று 4-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் இந்தியாவிற்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை மனிகா பத்ரா படைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.