தேர்வெழுத சென்ற வாலிபர்.! நொடியில் உயிரிழந்த சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டிராதேவிபட்டினம் பகுதியை சேர்ந்த ராஜாராம் பாண்டியனின் மகன் கோபாலகிருஷ்ணன். இவர் நேற்று நடைபெற்ற  குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு பரமக்குடியில் இருந்து அரசு பேருந்தில் ஏறி ராமநாதபுரத்தை நோக்கி சென்றுள்ளார். 

அப்போது, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த பேருந்து, சத்திரக்குடி சுங்கச்சாவடியில் சென்றபோது, அங்கிருந்த இரும்பு கம்பி இவரது மீது மோதியது. இதனால், பலத்தக் காயம் அடைந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

இதை பார்த்த சக பயணிகள் பயத்தில் கூச்சலிட்ட உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் இறந்ததை அறிந்த அவரது கர்ப்பிணி மனைவி கதறியது அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.