பார்வை மாற்றுத்திறனாளியான 55 வயது முதியவர் முதல் முயற்சியிலேயே குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை..!

தஞ்சை மாவட்டம் ஆழி வாய்க்கால் கிராமத்தில் பார்வை மாற்றுத்திறனாளியான முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கொண்டே, செவி வழியில் படித்து, முதல் முயற்சியிலேயே குருப்-2  பிரிலிமினரி தேர்வில்  தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 

55 வயதான ரவிச்சந்திரன், கணித பட்டப் படிப்பு முடித்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியான இவர், தன் கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் குரூப் 2 தேர்வு எழுத முடிவு செய்த இவர், கோச்சிங் சென்டர் சென்று படிக்க வசதி இல்லாததால், தேர்வுக்கான புத்தகங்களை வாங்கி,   மூதாட்டி ஒருவரை படிக்கச் சொல்லி அதனை செவி வழியில் கேட்டு மனப்பாடம் செய்துள்ளார்.

குருப் 2 பிரிலிமினரி தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த அவருக்கு இன்ப அதிர்ச்சியாக தேர்வில் தேர்ச்சி என்ற முடிவு வெளி வந்தது.

தொடர்ந்து அடுத்து நடக்கவுள்ள மெயின் தேர்வுக்கு தயாராகி வரும் ரவிச்சந்திரனின் முயற்சிக்கு ஒட்டு மொத்த கிராம மக்களும் துணை நிற்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.