10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக நடக்கும் செம்மறி ஆடுகள்!

வடக்கு சீனாவில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காரணங்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவிக்கவில்லை.

கால்நடை மருத்துவர்களும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், செம்மறி ஆடுகளின் இந்த வித்தியாசமான நடவடிக்கைக்கு, வட்ட வடிவில் நடக்கும் நோய் தாக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

“வட்டமிடும் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள், நிலையான பொருட்கள் மீது சாய்ந்து கொள்ளும், மூலைகளை நோக்கி செல்லும் அல்லது பாதிக்கப்பட்ட பக்கத்தை நோக்கி வட்டமிடலாம். இந்த நோய் பல விலங்குகளை பாதிக்கும்.” என மெர்க் கால்நடை மருத்துவக் கையேடு கையேடு கூறுகிறது.

ட்விட்டரில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்: எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

சீனாவில் செம்மறி ஆடுகளின் இந்த வினோதமான நடத்தைக்கான காரணம் சுற்றும் நோய் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த நடத்தைக்கான சாத்தியமான காரணங்களாக அந்நோய் கூறப்படுகிறது. கடந்த 4ஆம் தேதியன்று இந்த செம்மறி ஆடுகள் இதுபோன்று நடக்க ஆரம்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அவைகள் சாப்பிட்டனவா? தண்ணீர் அருந்தியதா என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் செம்மறி ஆடுகள் வட்டமாக நடப்பது பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.