முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதம்: தமிழக வீரர் சாதனை| Dinamalar

பெங்களூரு: பெங்களூரில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 38 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 403 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஜெகதீசன் 245 ரன்களும், சுதர்சன் 148 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் சதத்தை கடந்த ஜெகதீசன் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் சென்னை ஐ.பி.எல் அணியில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.