அமைச்சருக்கு சிறையில் மசாஜ் செய்தது போக்சோ கைதி; அவரு பிசியோதெரபிஸ்ட் அல்ல…

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில்அமைச்சருக்கு மசாஜ் செய்தது போக்சோ கைதி என்றும் அவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர ஜெயின், தற்போது சிறைக்குள் மசாஜ் செய்து கொண்ட விவகாரத்தில் சிக்கியுள்ளார். இவ்விகாரம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைபடி சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆம்ஆத்மி கட்சி கூறியது.

இதற்கிடையே சத்யேந்தர ஜெயினுக்கு மசாஜ் ெசய்துவிட்ட நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திகார் சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சத்யேந்தர ஜெயினுக்கு மசாஜ் செய்துவிட்டது சக கைதியான ரிங்கு என்பவர்தான்; போக்சோ பாலியல் பலாத்கார வழக்கில் கைது ெசய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி ரிங்கு ஒன்றும் பிசியோதெரபிஸ்ட் அல்ல’ என்று தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.