கொங்கு மண்டலத்தில் 3 அசைன்மென்ட்… வெடி வைக்க ரெடியான ஓபிஎஸ் டீம்!

அதிமுகவில் நடைபெறும் அதிகார மோதல் இருதரப்பையும் ஆள் பிடிக்கும் வேலையில் தள்ளியிருக்கிறது.

அணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள், ஆதரவாளர்களை ஓபிஎஸ் டீம் இழுக்கிறது.

அணியில் உள்ள பிரமுகர்களை ஈபிஎஸ் அணியினர் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணையத்தின் முடிவு, பொதுச் செயலாளர் பதவி ஆகிய விஷயங்களில் எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ? என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சமீபத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களை அரங்கேற்ற ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்படியென்ன ஆலோசிக்கப்பட்டது? எடப்பாடி அணிக்கு எந்தவிதமான நெருக்கடி கொடுக்கப் போகிறார்கள்? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்து வருகின்றன. ஓபிஎஸ் அணியை சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் இதுபற்றி பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய்களை நகர்த்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளில் ஊழல் நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக திமுக அரசு சமீபத்தில் தெரிவித்தது. ஆனால் அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி மீது எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கு முன்பு கொடநாடு விஷயத்திலும் கைது உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே திமுக உடன் ஈபிஎஸ் ரகசியமாக கூட்டணி வைத்திருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விஷயத்தை அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும்.மேற்கு மண்டலத்தில் தொடர்ச்சியான மாநாடு அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். முதலில் கோவை, அதன்பிறகு திருச்சி, கடைசியாக சேலத்தில் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்துவதன் மூலம் ஓபிஎஸ்சிற்கு எடப்பாடி கோட்டையிலும் ஆதரவு இருக்கிறது என்பதை அதிமுகவினர் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டி விடலாம் என்று கருதுகின்றனர்.முக்கிய நிர்வாகிகளை எதிர் தரப்பில் இருந்து தங்கள் அணிக்கு அழைத்து வர வேண்டும்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தக்க பதிலடி கொடுப்பர் என்பதில் சந்தேகமில்லை. அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறார். தெற்கு மண்டலத்தில் தனக்கான செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்களிடம் முக்கிய அசைன்மென்ட் கொடுத்து களமிறக்கி விட்டுள்ளார்.

இதனால் அதிமுக உட்கட்சி பூசல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்தத்தின் ரத்தங்களின் குழப்பங்கள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.