தமிழக பாஜக தலைவர் விரைவில் மாற்றம்! அண்ணாமலையின் ஓபன்டாக்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள புதியதாக துவக்கப்பட்ட தனியார் டீ கடையினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக எப்படி பெண்களை நடத்துகிறார்கள் என்பது தெரியும்.  கட்சியில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்கப்பட உள்ளது.நாணயத்தின் இரண்டு பக்கமும் உள்ளது. நாளை இது குறித்து இரண்டு தரப்பும் விசாரணை நடைபெறும். தவறு செய்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தவறு செய்தவர்கள் யாரையும் விடப் போவதில்லை. கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகை தாண்டக்கூடிய அனைவரும் மீதும் தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.டிடிவி தினகரன் பாஜகவோட கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து வரும் நாட்களில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன. அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது. பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் சரியாக செயல்படாதவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு புதியதாக பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவர்

தேசிய ஜனநாயக கூட்டணி பொருத்தவரை அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது. மேலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஒரு சிஸ்டம், செயல்முறை வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான மேற்கொள்ள வேண்டும் என எனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கக்கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. தேவைப்படின் பாஜக என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக்கூடிய நான் கூட மாற்றப்படலாம் அது கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பாடாக தான் இருக்கும்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.