நாளை (நவ26) விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட்

சென்னை :’இஸ்ரோ’ நிறுவனம், புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., – 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட்உதவியுடன், நாளை காலை விண்ணில் செலுத்துகிறது.’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களைவடிவமைக்கிறது.

அவற்றை, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இது தவிர, வணிக ரீதியில் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட், நாளை காலை 11:56 மணிக்கு விண்ணில்
பாய்கிறது. இந்த ராக்கெட் வாயிலாக, இ.ஓ.எஸ்., – 6, ஐ.என்.எஸ் – 2பி, ‘ஆனந்த், தைபோல்ட், அஸ்ட்ரோகாஸ்ட்’ என்ற பெயரில், ஒன்பது செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலை
நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அவற்றில் ஐந்து, இந்தியாவைச் சேர்ந்தது; மீதி நான்கு, அமெரிக்காவைச் சேர்ந்தது. இந்தியா, இரண்டு செயற்கைக் கோள்களை, பூடான் நாட்டிற்காக செலுத்துகிறது. முக்கியமான செயற்கைக்கோளான இந்தியாவின் இ.ஓ.எஸ்., – 6, மூன்றாம் தலைமுறைக்கான புவியை கண்காணிக்கும் திறன் உடையது. இது, கடல் மேற்பரப்பில் நிலவும் மாற்றம், கடலின் வெப்ப நிலை உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக புகைப்படம் எடுத்து,
கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். மீதி எட்டு செயற்கைக்கோள்கள், ‘நானோ’ எனப்படும் சிறிய வகையைச்சேர்ந்தவை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.