உதைபந்தாட்டடப் போட்டியில்  தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சம்பியன்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில்  தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது..

கொழும்பு றேஸ் ஹோர்ஸ் மைதானத்தில் (25.11.2022) நடைபெற்ற  இறுதிப்போட்டியில் ,குருநாகல் பெண்கள் மலியதேவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா கல்லூரி 3 : 0என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

முதல் இரண்டு கோல்களையும் அணி உபதலைவி கிரிசாந்தினி(றோஸ்) முதல்பாதி ஆட்டநேரத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியை முன்னோக்கி நகர்த்தினார்.

இரண்டாவது பாதியாட்டத்தில் கிரிசாந்தினி மேலும் ஒரு கோலை அடித்து ஆட்டநேர முடிவில் மகாஜனா 3 :0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனாயது.

வெற்றிபெற்று முதன்மை வீராங்கனைகளாக .கல்லூரிக்கு பெருமைசேர்த்த மாணவிகளை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.