நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை முன் ஆஜர்

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரகம் முன்பு இன்று விஜய் தேவரகொண்டா ஆஜரானார். பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, சினிமா இயக்குனர் பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர், குறிப்பிட்ட சினிமா படம் தொடர்பாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இவ்விவகாரம் ெதாடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அந்நியச் செலாவணி மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.