ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ரூ.82 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்:

ராஞ்சி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி பூஜா சிங்காலின் ரூ. 82 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

ஜார்க்கண்டில், சுரங்கத் துறை செயலராக உள்ள பூஜா சிங்கால், குந்தி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த போது, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக இரண்டு நாட்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான பூஜா சிங்கால், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை, அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்தது. இந்நிலையில், இந்திய அரசு சேவைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பூஜா சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.

இந்நிலையில் பூஜா சிங்கால் பெயரில் ராஞ்சியில் உள்ள ப்ளஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் நிலம் உள்ளிட்ட ரூ.82.77 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.