பாடசாலை இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 ஆம் ஆண்டின் பாடசாலை இரண்டாம்  தவணை இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்கமைவாக பாடசாலை மூன்றாம் தவணை எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை மூன்று கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.

அதன் முதல் கட்டம்;, எதிர்வரும் 5 அம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும். அதன் மூன்றாம் கட்டம் , பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.