வன்முறை பாடல்கள் மத்திய அரசு கிடுக்கி| Dinamalar

புதுடில்லி, வன்முறை, ரவுடியிசம், போதை பழக்கங்களை போற்றும் வகையிலான பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதை தவிர்க்கும்படி, எப்.எம்., ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

எப்.எம்., ரேடியோ சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எப்.எம்., ரேடியோ சேனல்களை ஒலிபரப்புவதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது கையெழுத்தான ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள விதிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வன்முறை, ரவுடியிசம், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றை புகழும் வகையிலான பாடல்களையோ, நிகழ்ச்சிகளையோ ஒலிபரப்ப வேண்டாம். இந்த விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.