இவர்கள் இந்திய ஹீரோக்கள்! தன்னை காப்பற்றியவர்கள் என வீடியோ வெளியிட்ட தென்கொரிய பெண்



தன்னிடம் அத்துமீறிய நபர்களிடம் இருந்து இரண்டு பேர் தன்னை காப்பாற்றியதாக தென்கொரிய இளம்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


வைரலான வீடியோ

தென்கொரிய யூடியூபர் மியோச்சி மும்பையில் நேரலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, குறித்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மியோச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இரண்டு இளைஞர்களுடன் அவர் உணவக்கத்தில் இருக்கிறார். அவர்கள் தான் தன்னை காப்பாற்றியதாகவும், அத்துமீறிய நபர்கள் குறித்த வீடியோவை பதிவிட உதவியதாகவும் கூறுகிறார்.

ஹீரோக்களை சந்தித்து விட்டேன்

அத்துடன், ஒரு வழியாக இந்திய ஹீரோக்களை சந்தித்து விட்டேன். இன்று மதிய உணவிற்கு என் யூகமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

மியோச்சி மற்றொரு டீவீட்டில் ஆதித்யா மற்றும் அதர்வா என குறித்த இரண்டு இளைஞர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.   





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.