நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமானடபுள் டெக்கர் வயடக்ட் கின்னஸ் புத்தகத்தில் பதிவு

நாக்பூர்: நாக்பூரில் ஒரே நெடுவரிசையில் நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் ஆதரவுடன் மிக நீளமான டபுள் டெக்கர் வையாடக்ட் அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மகா மெட்ரோ கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ஏற்கனவே ஆசியா புக் ரெகார்ட்  மற்றும் இந்தியா புக் ரெகார்ட் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. இப்போது இந்த விருதை பெற்றிருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இதைச் செய்ய 24 மணிநேரமும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.