மெஹிதி ஹசன் அபார சதம் ..! இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

மிர்புர்,

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்க வீரர்களாக அனமுல் ஹக், லிட்டன் தாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் அனமுல் ஹக் 11 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்களிலும் , ஷாகிப் அல் ஹசன் 8 ரன்களிலும்,வெளியேறினர்.இதனால் வங்காளதேச அணி தடுமாறியது

அடுத்து மகமதுல்லா ,மெஹிதி ஹசன் மிராஸ், இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய மகமதுல்லா அரைசதம் அடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் நிலைத்து ஆடிய மெஹிதி ஹசன் மிராஸ் சதமடித்து அசத்தினார்.

இறுதியில் 50 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு வங்காளதேச அணி 271ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சார்பில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் , சிராஜ் , உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து 272 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.