1 – 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 1 – 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட வேண்டும். தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாக உள்ளனர். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை என்பது தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைந்துவிடும் என ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.