சென்னை ரிச் தெருவில் 90 கடைகளுக்கு சீல்!..இதான் காரணம்…

சென்னை அண்ணாசாலை அருகே ரிச் தெருவில் தொழில்வரி செலுத்தாத 90 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு, நிகழ் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, தொழில்வரி பாக்கி வைத்திருப்பவா்கள் பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே ரிச் தெருவில் நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 90 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதைபோல பாரிமுனை நயினியப்பன் தெருவில் உள்ள 30 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

நீண்டகாலமாக தொழில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வரி செலுத்தாமல் தொழில் உரிமம் பெறாமல் கடைகளை நடத்தி வந்த காரணத்தினால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி இல்லாமல் நடத்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.