ஹரி இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் சூர்யா

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கதையில் தனக்கு போதுமான திருப்தி இல்லாததால் இப்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் வணங்கான் படத்திற்கு கொடுத்திருந்த அதே கால்ஷீட் தற்போது இயக்குனர் ஹரிக்கு கொடுத்திருக்கிறார் சூர்யா. அவர்கள் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் நடித்துள்ள சூர்யா, அதன்பிறகு அருவா என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த படம் டிராப் ஆன நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறாராம் சூர்யா. இதன் காரணமாக அருவா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் அருவா படத்தின் நாயகியாக முதலில் ராசி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அருவா படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.