தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை:  தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என சென்னை மழை பாதிப்பு குறத்து மாநக மேயர் பிரியாவுடன் இணைந்த ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், படகுகளும் சேதமடைந்தன. புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மழை பாதிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வடசென்னை பகுதியில் மேயர் பிரியாவுடன்  ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்பக்கப்பட்டுள்ளது.  புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. 400க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மேலும், வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.