சீனாவில் கொரோனா பரவல் மருத்துவமனைகள் அதிகரிப்பு| Dinamalar

பீஜிங்,-நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுதும் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இது முதன் முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தான் பரவியது என்று கூறப்பட்டாலும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியது. 2021ல் தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின், உலக நாடுகளில் இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. பாதிப்பு அதிகரித்ததால் பல மாகாணங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது.

இதை எதிர்த்து, மக்கள் கடந்த வாரம் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராடினர். மக்களின் கோபத்துக்கு பதில் சொல்ல முடியாத சீன அரசு, ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றது.

இருப்பினும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகிறது.

இதையடுத்து, தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை அதிகரிக்கும் பணிகளை சீன அரசு முடுக்கி விட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.