சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் ப்ரியா தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு விலை இல்லா சானிட்டரி நாப்கின் வழங்க 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு 18 நாப்கின் பைகள் வழங்கப்படும். அதற்காக மட்டும் 34.74 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேபோல் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரம் மாணவிகள் இதில் பயனடைவர். இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.4.6 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது