உதயத்தை வரவேற்ற கலைஞர்… பேனா கொடுத்த நேரு… முதல் நாள், முதல் கையெழுத்து!

’உதயநிதி ஸ்டாலின் எனும் நான்…’ என்ற பேச்சு தான் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக இன்று மாறியிருக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க முதல்முறை அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்

. தாத்தா

, தந்தை

ஆகியோருக்கு கிடைக்காத அங்கீகாரமும், பெருமையும் உதயநிதிக்கு கிடைத்திருக்கிறது. கட்சியிலும் சரி.

உடன்பிறப்புகள் மகிழ்ச்சி

ஆட்சியிலும் சரி. இவ்வளவு வேகமாக திமுகவில் யாரும் வளர்ந்ததே இல்லை. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஸ்டாலினுக்கு அடுத்து தங்களுக்கு வழிகாட்ட இளம் தலைவர் தயாராகிவிட்டார் என்று கூறி உடன்பிறப்புகள் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கின்றனர். ராஜ்பவனில் பதவியேற்பு விழா முடிந்ததும் தலைமை செயலகம் சென்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பேனா கொடுத்த நேரு

அப்போது மூத்த அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை அவரது நாற்காலியில் அமர வைத்தனர். இதையடுத்து கையெழுத்து இடுவதற்காக கோப்புகளை உதயநிதியின் மேஜையில் அதிகாரிகள் வைத்தனர். அப்போது அதிகாரி ஒருவர் பேனாவை நீட்ட, மறுபுறம்

மற்றொரு பேனாவை நீட்ட உதயநிதி சற்று தடுமாறி போனார்.

மூன்று கோப்புகளில் கையெழுத்து

இருப்பினும் மூத்த அமைச்சருக்கு மரியாதை அளிக்கும் வகையில் கே.என்.நேருவின் பேனாவை வாங்கி கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து தேதியை குறிப்பிடுமாறு அமைச்சர் நேரு கூறுகிறார். அதைக் கேட்டு தனது கடிகாரத்தில் தேதியை பார்த்து அதை கோப்பில் குறிப்பிடுகிறார். பின்னர் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஓய்வூதியம் அதிகரிப்பு

அவை, 2022-23ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், துப்பாக்கிச்சுடும் வீராங்கனை செல்வி நிவேதிதாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ஆகியவை ஆகும். இதில் விளையாட்டு வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி நினைவிடம்

பின்னர் மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதில், கருணாநிதி நினைவிடத்தில் உதயசூரியன் சின்னமும், “உதயத்தை வரவேற்போம்” என்ற வார்த்தைகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஸ்டாலினுக்கு நன்றி

இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன். பொதுமக்கள், அரசு நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செல்ல அதிக பொறுமை தேவை. விமர்சனங்களை செயலால் எதிர்கொள்வேன்.

சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியை தொடர்வேன். திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.