சொத்துக்குவிப்பு வழக்கு – அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1996-2001 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, தற்போதைய அமைச்சர் கீதா ஜீவன், அவரது தாயார் எபினேசர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மீது, கடந்த 2003 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

19 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஐந்து பேரையும் விடுவித்து, நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.